கொழும்பு - கொள்ளுப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் கட்டடம் தாழிறங்கும் நிலையில் இருக்கின்றது என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
குறித்த அதிகார சபையின் கட்டடத் தொகுதியிலுள்ள ஒரு பிரிவின் சுவர் இடிந்துள்ளது எனவும், அதையடுத்துக் கட்டடம் தாழிறங்கும் நிலையில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்து அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த இடத்தை ஆய்வு செய்வதற்காகப் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அங்கு விஜயம் செய்துள்ளனர்.